Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாகித்ய அகாடமி விருதுகள்..! 'விஷ்ணு வந்தார்' புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு விருது..!!

Senthil Velan
சனி, 15 ஜூன் 2024 (13:53 IST)
சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு, விஷ்ணு வந்தார்' என்ற சிறுகதை தொகுப்பு எழுதிய லோகேஷ் ரகுராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பால புரஸ்கார் விருதுக்கு, 'தன்வியின் பிறந்த நாள்' கதைத் தொகுப்பு எழுதிய யூமா வாசுகி தேர்வாகி உள்ளார்.
 
2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதுகள் 23 மொழிகளில் வந்த படைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, அசாமி, பெங்காலிம் ஆங்கிலம், குஜராத்தி உள்ளிட்ட மொழி படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருதுகள் வென்ற எழுத்தாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
‘விஷ்ணு வந்தார்’ புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமன் தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கு சாகித்ய விருது பெற்றுள்ளார்.
 
பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘தன்வியின் பிறந்தநாள்’ புத்தகத்தை எழுதிய யூமா வாசுகிக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருதுக்கு யூமா வாசுகி பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ: பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை..! உயர்நீதிமன்றம் வேதனை..!!
 
யூமா வாசுகி என்ற புனைப்பெயரில் கவிதை, கதை எழுதி வருபவரின் இயற்பெயர் மாரிமுத்து. ’கசாக்கின் இதிகாசம்’ என்ற மொழிப்பெயர்ப்புக்கு கடந்த 2017ம் ஆண்டு சாகித்ய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி தான்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்