Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடுப்பில் சுற்றப்பட்ட ரூ.28 லட்சம்: சென்னையில் பிடிபட்ட 21 வயது வாலிபரிடம் விசாரணை!

Advertiesment
இடுப்பில் சுற்றப்பட்ட ரூ.28 லட்சம்: சென்னையில் பிடிபட்ட 21 வயது வாலிபரிடம் விசாரணை!
, புதன், 2 ஜூன் 2021 (08:02 IST)
இடுப்பில் சுற்றப்பட்ட ரூ.28 லட்சம்: சென்னையில் பிடிபட்ட 21 வயது வாலிபரிடம் விசாரணை!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய 21 வயது வாலிபர் ஒருவரின் இடுப்பில் 28 லட்சரூபாய் சுற்றி வைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து வந்த சிறப்பு ரயிலில் 21 வயது வாலிபர் ஒருவர் இறங்கி உள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை சந்தேகப்பட்டு விசாரணை செய்தபோது அவரது இடுப்பில் 2000 ரூபாய் கட்டுகள் 28 லட்சம் ரூபாய் சுற்றி மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது 
 
இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தபோது தான் நகை கடை ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் சென்னையில் உள்ள நகை கடை ஒன்றுக்கு பணம் கொடுக்க வந்ததாகவும் நான் பணத்தை கொடுத்துவிட்டு மீண்டும் ஐதராபாத் சென்று விடுவதாகவும் கூறி உள்ளார்
 
இது குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்ததை அடுத்து வருமான வரித்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் விசாரணை செய்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? இன்னும் சிலமணி நேரங்களில் அறிவிப்பு!