Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ.பி.,க்கு ரூ.966 கோடி…தமிழகத்துக்கு ரூ.510 கோடி தானா ? ஸ்டாலின் கேள்வி

Advertiesment
UP
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (14:24 IST)
இந்தியாவில் கொரோனா தாக்குதல் பரவிவருகிறது. இதில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நேற்று நிதி ஒதுக்கியது. தமிழக அரசுக்கு ரூ. 510 கோடி ஒதுக்கியது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதாக பலரும்விமர்சனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக திமுக தலைவரும் எதிர்கட்சிதலைவருமான ஸ்டாலின் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில்,  234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்துக்க்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 600க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுதற்கு ரூ.510 கோடி தானா ? தமிழகத்திற்கு உ.பி, பீகார்,ஒடிஷா , ம.,பி ஆகிய மாநிலங்களை விட குறைவான நிதியை ஒதுக்கியதற்குக் காரணம் என்ன ? மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுகு தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு கிடையாது என்று  அறிவித்துள்ளனர். இது உறுப்பினர்களை நெருக்கடியில் ஆழ்த்தும். மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு ஒரேநாளில் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு எப்போ முடியுதோ, அப்பதான் சரக்கு கிடைக்கும்! – அமைச்சர் தகவல்!