Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு..

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (09:35 IST)
500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் என்ற பகுதியில் ரேஷன் கார்டு வழங்க பச்ச முத்து என்ற முதுநிலை வருவாய் அதிகாரி ரூபாய் 500 லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இது குறித்து லஞ்சம் கொடுத்தவர் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்வு வெளியாகியுள்ளது.
 
இந்த வழக்கில் ரூபாய் 500 லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் பச்சமுத்துவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தான் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு அச்சப்படுவார்கள் என்று இந்த தீர்ப்பு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments