Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலையில்லாமல் வறுமை.. இளைஞர் போட்ட திட்டத்தால் 3 வேளை தற்போது சாப்பாடு..!

வேலையில்லாமல் வறுமை.. இளைஞர் போட்ட திட்டத்தால் 3 வேளை தற்போது சாப்பாடு..!
, செவ்வாய், 14 மார்ச் 2023 (11:58 IST)
வேலையில்லாமல் வறுமையில் வாடிய இளைஞர் ஒருவர் போட்ட திட்டத்தின் காரணமாக அவருக்கு மூன்று வேளை தற்போது சாப்பாடு கிடைக்கிறது என்பதும் ஆனால் அந்த சாப்பாடு சிறையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஈரோடு பகுதியைச் சேர்ந்த 34 வயது சந்தோஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அவர் வறுமையில் வாடிய நிலையில் மூன்று வேலை சாப்பாடு கூட கிடைக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சிறைக்கு சென்றால் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்று ஒரு சிலட் கூறியதை அடுத்து அவர் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது வேலையில்லாமல் வறுமையில் வாடுவதாகவும் இதனால் சிறைக்கு சென்றால் மூன்று வேளை உணவு கிடைக்கும் என்பதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல அவர் மூன்று முறை செய்திருப்பதாகவும் வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
அவரை சிறையில் அடைத்து தண்டனை கொடுப்பதை விட அவருக்கு ஒரு நல்ல வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அலர்ட்டா இருங்க.. அணுகுண்டோட வறாங்க! – அமெரிக்கா எச்சரிக்கை!