Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.5 கோடி கொடுத்த தமிழக நிறுவனம்

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (19:43 IST)
கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும், தொழிலதிபர்களும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.5 கோடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
வணக்கம் தங்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தாங்கள் எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பாக முதற்கண் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு எங்கள் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 கோடி நிதியுதவியாக அனுப்பி உள்ளோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் நாங்களும் பங்கேற்க தாங்கள் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி’ என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments