Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.32,83,844 அமோக வசூல்; ஊரடங்கை மீறி வந்து வாரி கொடுக்கும் மக்கள்!!

ரூ.32,83,844 அமோக வசூல்; ஊரடங்கை மீறி வந்து வாரி கொடுக்கும் மக்கள்!!
, புதன், 8 ஏப்ரல் 2020 (09:29 IST)
தமிழகத்தில் ஊரடங்கை மீறி சாலைகளில் திரிவதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,13,117 உள்ளது.
 
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கை பின்பற்றி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஆனால் அதையும் மீறி மக்கள் அடிக்கடி சாலைகளில் திரிந்து வருவதால் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,03,833 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 1,13,117 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
 
இது மட்டும் அல்லாமல் 87,577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.32,83,844 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவ என்ன காரணம்? புளுகிய சதிகோட்பாட்டாளர்கள்- தூக்கியடித்த யூட்யூப்!