Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு தினத்தில் இலக்கை தாண்டி மது விற்பனை! எத்தனை கோடி தெரியுமா?

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (06:05 IST)
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் இலக்கு வைக்கப்பட்டு மதுவிற்பனையை தமிழக அரசு நடத்தி வரும் நிலையில் இந்த ஆண்டும் புத்தாண்டு தினத்திற்கு மதுவிற்பனை இலக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதன்படி டிச.31 மற்றும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது. இந்த விற்பனை தொகையின் மதிப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டு இருந்த மதுவிலைக்கும் இந்த ஆண்டு மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரூ.175 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ரூ.200 கோடி இலக்கு வைக்கப்பட்ட நிலையில் இலக்கை தாண்டி மதுவிற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments