ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திடீரென புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் கலெக்டராகவும், தமிழகத்தின் பல துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர் சகாயம். தற்போது ஓய்வு பெற்ற நிலையில், அவர்பணியில் இருந்தபோது கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை கண்டுபிடித்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையில் சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அனுப்பிய கடிதத்தில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு விலக்கப்பட்டது தவறானது என்றும், இதனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதியிடம் தெரிவிக்கவே இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற வளாகத்தில் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது