Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகரிக்கும் கட்டுப்பாட்டு பகுதி: சென்னை என்ன ஆகுமோ??

அதிகரிக்கும் கட்டுப்பாட்டு பகுதி: சென்னை என்ன ஆகுமோ??
, வியாழன், 11 ஜூன் 2020 (11:53 IST)
கொரோனா பாதிப்பால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 1,927 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் சுமார் 2000ஐ நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.  
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,927 பேர்களில் 1,390 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,973 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து கொரோனா பாதிப்பால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 360 ஆக ஊஅர்த்தப்பட்டுள்ளது. அதிலும் ராயபுரத்தில் 78, கோடம்பாக்கத்தில் 73 என அதிகபட்ச கட்டுப்படுத்தப்பட்ட பகுதி உருவாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க எதையும் மறைக்கல; மறைக்கவும் முடியாது! – கொரோனா இறப்பு குறித்து முதல்வர் விளக்கம்!