Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 10 ஆயிரம் பாதிப்புகள்: 3 லட்சத்தை நெருங்கிய இந்தியா!

ஒரே நாளில் 10 ஆயிரம் பாதிப்புகள்: 3 லட்சத்தை நெருங்கிய இந்தியா!
, வியாழன், 11 ஜூன் 2020 (10:07 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளத நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,86,579 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 8,102 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,41,029 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,438 பேர் பலியான நிலையில் 44,517 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 36,841 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 21,521 பேரும், டெல்லியில் 32,810 பேரும், ராஜஸ்தானில் 11,600 பேரும், மத்திய பிரதேசத்தில் 10,049 பேரும், உத்தர பிரதேசத்தில் 11,610 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தானில் கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு? கூவத்தூர் பாணியில் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் அடைப்பு