Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ?

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (15:51 IST)
தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இருப்பினும் ஜனவரி 17 முதல்  நடைபெற்று வந்த வகுப்புகள் கொரொனா இரண்டாம் அலைப் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்குக் கற்பித்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்த்தல், மாணவர்களுக்கு மதிப்பெ வழங்குதல், விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்குவது, நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ளவேண்டி  அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியத் தேவையில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments