Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போராட்டத்தில் கைதான அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு

anbumani ramadass
, வெள்ளி, 28 ஜூலை 2023 (18:53 IST)
கடலூரில் இன்று என்எல்சியை  முற்றுகைப் போராட்டத்தின்போது அன்புமணி ராமதாஸ் கைதுசெய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து  பாமகவினர் போராட்டம் நடத்திய நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடலூரில் நடைபெற்று வரும் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை  கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் இன்று நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. 

ஒருசில பாமகவினர்  உள்ளே செல்ல முயன்றபோது, போலீசின்  தடுப்பை மீறி முன்னேறிச் செல்ல முயன்றபோது, போலீசாருக்கும் பாமகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.

காவல்துறையினர் மற்றும் பாமகவினர் இடையே மாறி மாறி கற்கள் வீசித் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தடியடி  நடந்தது இதில், ஒரு போலீஸ் காரரின் மண்டை உடைந்தது. அவரை சக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

பாமகவினரின் முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசப்பட்டன. இந்த இடம் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக தகவல் வெளியாகும்  நிலையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் கடலூர், நெய்வேலிக்கு  நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். 

இந்த  நிலையில், என்எல்சிக்கு  நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்க வேண்டும்: நீதிபதி வேண்டுகோள்