Publish Date: Thu, 26 Aug 2021 (16:10 IST)
Updated Date: Thu, 26 Aug 2021 (16:14 IST)
தமிழகத்தில் ஆகஸ்ட் 29,30 ஆம் தேதிகளில் அதீத அனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தமிழக்த்தில் வரும் ஆகஸ்ட் 29,30 ஆம் தேதிகளில் அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என கூறியுள்ளது.