Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - தமிழகத்தில் மையம் கொண்ட மழை!

Rain

Prasanth Karthick

, செவ்வாய், 16 ஜூலை 2024 (15:08 IST)

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே லேசான மழை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாக்குமரி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20ம் தேதி வரை தமிழகம், மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றி கல்வெட்டுகளை திறந்து வைத்தார் - தொல் திருமாவளவன்!