Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Advertiesment
Rain

Mahendran

, திங்கள், 26 மே 2025 (17:49 IST)
தென்மேற்கு பருவமழை  வலுப்பெற்று வருவதன் காரணமாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் இன்றிரவு பரவலான மழை பெய்யக்கூடும். மேலும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மலைபகுதிகளிலும், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகத்திலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரலாம். சில இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் பரபரப்பான காற்றும் வீசக்கூடும்.
 
சென்னையில் வானம் மேகமூட்டமாகவும், சில இடங்களில் இடியுடன் மழையும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!