12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

Mahendran
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (15:35 IST)
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். 
 
மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வுகள் எழுதுவது, அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இது அவர்களது கற்றல் திறனைப் பாதிக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 
 
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு பிளஸ் 1 பாடங்கள் ஒரு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே மாணவர்களுக்கு மன அழுத்தமாக மாறிவிடக் கூடாது என்பதே இந்த முடிவிற்கான முக்கியக் காரணம் என்று அவர் கூறினார். 
 
மேலும், பிளஸ் 1 பாடங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், அவற்றை முழுமையாக பள்ளிகளில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த பாடங்களை நன்றாகப் படித்தாலே போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments