Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த வேட்பாளர் வென்றால் மீண்டும் தேர்தல்! – தேர்தல் தலைமை அதிகாரி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (10:59 IST)
ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது மாதவராவ் வெற்றி உறுதியானால் அவர் இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு, மறைந்த வேட்பாளர் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அத்தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments