Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பாதிக்கப்பட்ட வேட்பாளர் உயிரிழப்பு! – வெற்றி பெற்றால் இடைத்தேர்தலா?

கொரோனா பாதிக்கப்பட்ட வேட்பாளர் உயிரிழப்பு! – வெற்றி பெற்றால் இடைத்தேர்தலா?
, ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (08:58 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்துள்ள நிலையில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது மாதவராவ் வெற்றி உறுதியானால் அவர் இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை: மீண்டும் ஊரடங்கா?