Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 முதல் 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்! – ராமதாஸ் கோரிக்கை!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (12:55 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு 10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிகளிலும் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 முதல் 12 வகுப்புகள் வரையிலும் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க இருப்பதால் பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது அவர்களிடையே கொரோனா பாதிப்பை தீவிரமாக்கும் அபாயம் உள்ளதாகவும், மாணவர்கள் நலன் கருதி 10 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments