Publish Date: Wed, 27 Oct 2021 (15:47 IST)
Updated Date: Wed, 27 Oct 2021 (15:49 IST)
திரைப்பட துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.
சமீபத்தில் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் வெற்றி மாறன், தனுஷ் உள்ளிட்ட பலர் விருதுகளை பெற்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று நடிகர் ரஜினிகாந்த் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.