Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லாவை நிரப்ப வேறு வழியை பாருங்கள் – பொங்கிய ரஜினிகாந்த்!

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (10:50 IST)
மதுக்கடைகள் மூட சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழகம் மேல்முறையீடு செய்துள்ளதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்டதால் மதுக்கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு மேல்முறையீடு செய்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மீண்டும் தமிழகம் மேல்முறையீடு செய்திருப்பதற்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் “ என்று கூறியுள்ளார்.

நீண்ட நாட்களாக அரசியல் குறித்து கருத்துகள் தெரிவிக்காமல் இருந்த ரஜினிகாந்த் தற்போது நேரடியாக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments