Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் 'இந்து தீவிரவாதி' குறித்து ரஜினிகாந்த் கருத்து

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (07:14 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சரம் செய்தபோது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பேசியபோது, 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தான் நாதுராம் கோட்சே என்று பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு இந்து ஆதரவாளர்களும், அரசியல் கட்சியினர்களும், ஒருசில திரையுலகினர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்திடமும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் இரண்டு நாள் பிரச்சாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்தார். இரு திராவிட கட்சிக்கு மாற்றுக்கட்சி என்று பலர் எண்ணியிருந்த நிலையில் அவருடைய இந்த பேச்சு அவர் மீதிருந்த நன்மதிப்பை திடீரென குறைத்துவிட்டதாக நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமல்ஹாசனின் பேச்சு குறித்து ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது 'இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை' என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments