Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத்திருந்து காத்திருந்து கடுப்பான ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்; கடைசியில் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (10:03 IST)
நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த வருடம் அறிவித்தார். இதையடுத்து, தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் அவரது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். 
ஆனால் தற்போது வரை கட்சியையும் ஆரம்பிக்கவில்லை, அதற்கான சிறு அறிகுறிகளும் இல்லை. தொடர்ந்து படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் மன்றத்தின் கோட்பாடுகளை மீறியதாக கூறி அவ்வப்போது நிர்வாகிகள் மட்டும் நீக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்திருந்து காதிருந்து கடுப்பான கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனையறிந்த ரஜினி மதியழகனை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 
கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகியும் இதுவரை கட்சி பெயர், சின்னம் ஒன்றையுமே ரஜினி அறிவிக்கவில்லையே, என்ன தான் நடக்கப்போகிறது என பல மக்கள் மன்ற நிர்வாகிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றனராம். ஆனால் இதெல்லாம் ரஜினிக்கு தெரியாது. தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமே அவருக்கு தெரியும்.....

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments