Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஞ்சள் படையை இராஜபாளையத்தில் இறக்கிவிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

மஞ்சள் படையை இராஜபாளையத்தில் இறக்கிவிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
, திங்கள், 22 மார்ச் 2021 (12:51 IST)
இராஜபாளையத்தில் இறக்கிவிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்தமுறை விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் களமிறங்கியுள்ளார் 
எப்போதும் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் காட்சி அளிக்கும் அவர் தற்போது ராஜபாளையம் தொகுதி முழுவதும் மஞ்சள் நிறத்திற்கு மாறி வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆதரவாளர்களும் மஞ்சள் உடை அணிந்து தொகுதி முழுவதும் ஓட்டு கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜியின் மஞ்சள் படை ராஜபாளையத்தில் களம் இறங்கியுள்ளதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். துடிப்பான இளைஞர்களை கொண்ட ஐடி பிரிவு ஒன்றும், முழு வேகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் இவர்கள் அதிமுக கொள்கை மற்றும் பிரச்சாரங்களை வாக்காளர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் பணியை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்த தொகுதியில் பாஜகவினர் ஆதரவாளர்கள் அதிகம் என்பதாலும் இந்து முன்னணியின் ஆதரவாளர்கள் பலர் இருக்கின்றார்கள் என்பதும் ராஜேந்திர பாலாஜியின் வெற்றி உறுதி என்றே கூறப்பட்டு வருகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

400 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கலக்கம்!