Publish Date: Fri, 19 Mar 2021 (17:52 IST)
Updated Date: Fri, 19 Mar 2021 (17:53 IST)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிளானேரிபகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மாட்டுவண்டியில் பிரச்சாரம் செய்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பதி சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது அரசியல் கட்சியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை கிளானேரி கிராமப்பகுதியில் பிரச்சாரம் செய்தபோது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதிமுக அரசுதான் தடையை நீக்கியது என்று கூறினார்.
அப்போது அருகில் இருந்த இரட்டை மாட்டு வண்டியில் ஏறி ரெட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திடீரென்று மாட்டு வண்டியில் ஏறி பிரச்சாரம் செய்தது பரபரப்பாக காணப்பட்டது.