Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபாளையம் - செங்கோட்டை 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (20:26 IST)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வரையிலான 4 வழிச்சாலை அமைக்க அண்மையில் மத்திய அரசு திட்டமிட்டு அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியையும் தொடங்கியது
 
இந்த சாலை ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகள் வழியாக குற்றாலம், செங்கோட்டை செல்லவுள்ளது. ஆனால் இந்த சாலை அமைக்கப்படவுள்ள பெரும்பாலான பகுதிகளில் விவசாய நிலம் உள்ளது.  இதனால் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் ராஜபாளையம் - செங்கோட்டை 4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தகவல் பெற்று தெரிவிக்க மத்திய அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments