Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (10:23 IST)
தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா:
கொரோனா வைரஸால் கடந்த சில வாரங்களாக அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒருசில அமைச்சர் உள்பட மொத்தம் 16 எம்எல்ஏக்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் மட்டும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கபாண்டியன் எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் எம்எல்ஏவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments