அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக திமுக வழக்கு! – இன்று விசாரணை!

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (10:14 IST)
உள்ளாட்சி பணிகளுக்கான டெண்டர்களில் மோசடி செய்ததாக அமைச்சர் வேலுமணி மீது திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

உள்ளாட்சி பணிகளுக்காக விடப்பட்ட டெண்டர்களில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய அறப்போர் இயக்கம் மற்றும் திமுக ஆகியவை இந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

மேலும் இந்த வழக்கை நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டு, நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருக்கும் இந்த விசாரணையில் புலனாய்வு குழு அமைப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்புக்கு அண்ணாமலை காரணமா? அவரே அளித்த விளக்கம்..!

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

அடுத்த கட்டுரையில்
Show comments