Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்: 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்: 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
, செவ்வாய், 25 மே 2021 (07:44 IST)
கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்
சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தைரியமாக கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
போக்சோ சட்டத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் ஜாமீனில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் சில பள்ளி மாணவிகளும் புகார் அளிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மேலும் சில ஆசிரியர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலும் சில கருப்பு ஆடுகள்: விஸ்வரூபம் எடுக்கும் பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரம்