Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச.4 முதல் மீண்டும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:27 IST)
டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் முன்னதாக சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானாலும் அவை புயலாக வலுவடையாமலே கலைந்தன. எனினும் தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. 
 
இந்நிலையில் தற்போது அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments