Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமிக்கு தடுப்பூசி ஆகாது! செவிலியர்கள் முன்பு சாமியாடிய மூதாட்டி!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:26 IST)
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என மூதாட்டி சாமியாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்த நிலையில் மாநிலங்கள்தோறும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருந்தாலும் பலர் பயத்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலும் இருந்து வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பலரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதிகளை செவிலியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைத்துள்ளனர். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும் அந்த மூதாட்டி திடீரென சாமியாடத் தொடங்கியதுடன் அங்காளத்தம்மனுக்கு தடுப்பூசி ஆகாது என கூறியுள்ளார். பின்னர் செவிலியர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments