Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
திங்கள், 5 மே 2025 (08:11 IST)

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதலாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 7 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கோடை வெயில் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. அக்கினி வெயில் தொடங்க உள்ள நிலையில் ஆங்காங்கே குளிர்விக்கும் விதமாக மழையும் பெய்து வருகிறது. நேற்று சென்னை தொடங்கி, டெல்டா மாவட்டங்கள் வரை இரவு நேரத்தில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று காலை நேரத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments