Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (16:15 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில்    உள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சியினால், இன்று முதல் வரும் 19 ஆம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

மேலும், வரும் மார்ச் 20 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

பேச்சுவார்த்தை இல்லை.. அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. சீனா அதிரடி..!

கே.என்.நேரு சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக தலைவர் இவர் தானா? எதிர்த்து யாரும் போட்டி இல்லை.. அண்ணாமலை என்ன ஆவார்?

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments