சென்னையின் பல இடங்களில் மழை.. குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (10:55 IST)
சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை பெறுவதை அடுத்து கோடை காலத்தில் குளிர்ச்சியை மக்கள் உணர்ந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது கோடை மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மந்தவெளி, வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்பட சென்னை முக்கிய பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. 
 
கடந்த சில நாட்களாக கடும் வெப்பநிலை இருந்து வந்த நிலையில் மழை பெய்துள்ளது சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments