ஜனவரி 4 வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (14:35 IST)
தமிழகத்தில் ஜனவரி நான்காம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் நிலையில், வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை உருவாவதால், இன்று முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, ஜனவரி 2-ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவித்த நிலையில், தற்போது அது ஜனவரி 4-ஆம் தேதிக்குப் போகும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments