Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 4 வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (14:35 IST)
தமிழகத்தில் ஜனவரி நான்காம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் நிலையில், வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை உருவாவதால், இன்று முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, ஜனவரி 2-ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவித்த நிலையில், தற்போது அது ஜனவரி 4-ஆம் தேதிக்குப் போகும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments