Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றிரவு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்றிரவு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran

, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (15:06 IST)
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அதுமட்டுமின்றி, அக்டோபர் 20ஆம் தேதி வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழக முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில், அதாவது திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சை கருத்து: நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!