Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலை 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்..!

காலை 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்..!

Siva

, திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:10 IST)
தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வங்கம் நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் முதல் குரங்கம்மை நோயாளி கண்டுபிடிப்பு: சுகாதார அமைச்சகம் தகவல்..!