Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமான நிலையத்தில் வைத்தே மகாவிஷ்ணுவை கைது செய்ய திட்டமா?

விமான நிலையத்தில் வைத்தே மகாவிஷ்ணுவை கைது செய்ய திட்டமா?

vinoth

, சனி, 7 செப்டம்பர் 2024 (13:38 IST)
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூட நம்பிக்கைகள் மற்றும் முற்பிறவி பற்றியெல்லாம் மாணவர்கள் மத்தியில் பேசி சர்ச்சையில் சிக்கினார் மகாவிஷ்ணு. அப்போது அவர் மாற்றுத்திறனாளிகள் பற்றி பேசிய கருத்து அங்கிருந்த ஆசிரியர் சங்கர் என்பவரால் தட்டிக்கேட்கப்பட்ட போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மகாவிஷ்ணு.

இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆசிரியர் சங்கரைப் பாராட்டி பேசினார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள், மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் மகாவிஷ்ணு எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகாவிஷ்ணு, இன்று மதியம் சென்னக்கு விமானம் மூலம் வரவுள்ளதாக வீடியோ மூலமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து அவர் சென்னை விமான நிலையம் வரும் போது அவரை அங்கு வைத்தே கைது செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக சைதாப்பேட்டை போலீஸார் சென்னை விமான நிலையத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்.! கைது செய்ய காவல்துறை முனைப்பு.!!