Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Rain

Mahendran

, செவ்வாய், 22 அக்டோபர் 2024 (16:36 IST)
இன்று தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை காண்கிறோம்.

மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாத சம்பளம் ரூ. 9,000 பெறும் பெண் கூலி தொழிலாளிக்கு ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி.. அதிர்ச்சி சம்பவம்..!