Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று காலை 10 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Advertiesment
Rain

Siva

, திங்கள், 21 அக்டோபர் 2024 (07:33 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில், காலை வெயிலும் மாலை மழையும் என்ற நிலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, மற்றும் திருப்பூர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்? புதிய கவர்னர் இவரா?