Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
திங்கள், 23 ஜூன் 2025 (10:18 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல், கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே நேற்று இரவு சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில், சென்னை முழுவதும் தற்போது குளிர்ச்சியான தட்பவெப்பநிலை இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்றைய மாலை மழை மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில், இன்றும் மழை பெய்யும் என்பதால் சென்னை மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments