Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்: அதிரடி உத்தரவு..!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (15:14 IST)
ஒரு ரயில்வே ஊழியர் எந்த மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறாரோ அந்த மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே போது மேலாளர் ஆர்என் சிங் தெரிவித்துள்ளார். 
 
பிற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பாக ரயில் டிக்கெட் கவுண்டரில் இருப்பவர்களுக்கு மாநில மொழி தெரியாததால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பிரச்சனை வருகிறது என்றும் எனவே பயணிகளோடு தொடர்புடைய ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் ஆர்என் சிங் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து இனிமேல் தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள், டிக்கெட் வழங்குபவர்கள், பரிசோதகர்கள் ஆகியோர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. அதேபோல் ரயில்வே பாதுகாப்பு படையினர், வணிக எழுத்தாளர்கள், டிக்கெட் பரிசோதனை செய்பவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆகியோர்களுக்கும் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்றும் மொழி தெரியாதவர்களுக்கு அந்தந்த மொழி பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஆர்என் சிங் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments