Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த அதிரடியில் பொன்.மாணிக்கவேல் - தஞ்சை பெரிய கோவிலில் திடீர் ஆய்வு

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (16:09 IST)
ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு போலீஸார் தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐஜி பொன். மாணிக்கவேல் திருடப்பட்ட பல சிலைகளை அதிரடியாக பறிமுதல் செய்து வருகிறார். சமீபத்தில் கூட சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சென்ற குழு 89 சிலைகளை பறிமுதல் செய்தது. அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது. தஞ்சை கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலைகளும் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆய்வு நடத்த சென்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கோவிலில் இருந்த பக்தர்களை வெளியேற்றிவிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments