ஓபிஎஸ்-க்கு ராணுவ விமானம் கொடுத்தது ஏன்? - வாய் திறந்த நிர்மலா சீதாராமன்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (15:52 IST)
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ்-ஸின் சகோதரர் பாலமுருகனை மதுரை அப்போலோவிலிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்ற, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை கொடுத்து உதவிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
இந்த விவகாரத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படையாக ஓ.பி.எஸ் கூறி விட, அந்த விவகாரம் பூதாகரமானது. இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன் தன்னை சந்திக்க டெல்லி வந்த ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமலேயே திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்தது.
 
அதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் ராணுவ விமானத்தை வாடகைக்கு விடுபவர் என தற்போதும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுபற்றி நிர்மலா சீதாராமன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வந்தார்.
 
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அவசர நிலை காரணமாகவே ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரருக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது. தற்போது கூட இமாச்சலப்பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளது. உதவி கேட்பவர்களுக்கு அவசர உதவி வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்” என அவர் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments