Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

rahul priyanka
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:17 IST)
இந்தியா முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், அதுமட்டுமின்றி ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லியில் ராகுகாந்தி தலைமையிலும், டெல்லியின் இன்னொரு பகுதியில் பிரியங்கா காந்தி தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள சாலையில் அமர்ந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் தனித்தனியே டெல்லி காவல்துறை கைது செய்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி உள்பட பல்வேறு மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலூரில் அக்னிபாத் ஆள்சேர்ப்பு முகாம்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! – முழு விவரம் உள்ளே!