Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நடைபெற இருந்த தேர்வின் வினாத்தாள் கசிவு.. நெல்லை பல்கலையில் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 27 மே 2025 (10:26 IST)
திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் ‘இண்டஸ்ட்ரியல் லா’ என்ற பாடத் திட்டத்தின் தேர்வு இன்று நடைபெற இருந்தது. ஆனால், அந்த பரிட்சையின் தேர்வின் முன்கூட்டியே வெளியில் வந்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது.
 
இதனை தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுத்து, தேர்வினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 106 கல்லூரிகளுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
தள்ளிவைக்கப்பட்ட தேர்வு மே 30 அல்லது 31ம் தேதிகளில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. சரியான தேதியுடன் கூடிய முழுமையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
வினாத்தாள் எப்படி கசியப்பட்டது, யாரால் இது நிகழ்ந்தது என்பதற்கான விசாரணைகள் பல்கலைக்கழகம் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மூலமாக முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த சூழ்நிலையில் குழப்பமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் நலனுக்காகவே எடுக்கப்பட்டவை என அதிகாரிகள் விளக்குகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னா பெயர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments