Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நடைபெற இருந்த தேர்வின் வினாத்தாள் கசிவு.. நெல்லை பல்கலையில் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 27 மே 2025 (10:26 IST)
திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் ‘இண்டஸ்ட்ரியல் லா’ என்ற பாடத் திட்டத்தின் தேர்வு இன்று நடைபெற இருந்தது. ஆனால், அந்த பரிட்சையின் தேர்வின் முன்கூட்டியே வெளியில் வந்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது.
 
இதனை தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுத்து, தேர்வினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 106 கல்லூரிகளுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
தள்ளிவைக்கப்பட்ட தேர்வு மே 30 அல்லது 31ம் தேதிகளில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. சரியான தேதியுடன் கூடிய முழுமையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
வினாத்தாள் எப்படி கசியப்பட்டது, யாரால் இது நிகழ்ந்தது என்பதற்கான விசாரணைகள் பல்கலைக்கழகம் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மூலமாக முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த சூழ்நிலையில் குழப்பமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் நலனுக்காகவே எடுக்கப்பட்டவை என அதிகாரிகள் விளக்குகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்தியெக்கு சுக்காவா..! வெளிநாட்டு பெண்களை கடத்தி கல்யாணம் செய்யும் சீனர்கள்! - ஏன் தெரியுமா?

மைசூர் ஸ்ரீ எல்லாம் செல்லாது.. மைசூர்பாக்கை கண்டுபிடித்தவரின் வாரிசு கண்டனம்..!

பிரான்ஸ் பிரதமர் கன்னத்தில் அறைந்த மனைவி.. நாங்க சும்மா விளையாடினோம் என விளக்கம்..!

என் கணவரை டிரைவர் என கூறுவதா? இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்த போலந்து பெண்..!

கமல்ஹாசன் உள்பட திமுக ராஜ்யசபா எம்பிக்கள் யார் யார்? வைகோ மீண்டும் எம்பி ஆவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments