Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாண்டு விடுமுறை அக்.12 வரை நீட்டிப்பு! – குஷியான மாணவர்கள்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:06 IST)
தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அக்டோபர் 12 வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60: அமலுக்கு வந்த உத்தரவு!

இந்நிலையில் 1 முதல் 5ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால் முன்னதாக 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி அக்டோபர் 10 முதல் 12வரை நடைபெற உள்ளதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments