Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்! – கோவை வந்த பஞ்சாப் விவசாயிகள்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:33 IST)
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக கூறியிருந்த பஞ்சாப் விவசாயிகள் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் ஐந்து மாநில தேர்தல்களிலும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போவதாக பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் வந்த பஞ்சாப் விவசாயிகள் அங்கு தந்தை பெரியார் படிப்பகத்தில் உள்ள பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments