Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சைக்காரர்களிடம் வசூல் செய்த கோவில் ஊழியர் – புதுக்கோட்டையில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (14:36 IST)
புதுக்கோட்டையில் கோவில் ஒன்றில் பிச்சை எடுக்க அனுமதி வழங்க பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் ஒருவர் பணம் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் பிரசித்தி பெற்ற சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை அன்று பக்தர்கள் திரளாக வருவது வழக்கம். இந்நிலையில் அந்த கோவிலுக்கு பிச்சை எடுக்க வரும் பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் பிச்சையெடுக்க தலா ரூ.2,000 பெற்றுள்ளார், அதேபோல தர்ப்பணம் கொடுக்கும் புரோகிதர்களிடமும் ரூ.1,600 பெற்றுள்ளார்.

இதுகுறித்து பிச்சைக்காரர்கள் அளித்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அறநிலையத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்திராணியிடம் மன்னிப்பு கடிதம் மட்டும் எழுதி வாங்கி கொண்டு விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments